கர்த்தர் வருகிறார்
போதை உலகம்
துளிர்த்தது
காம விலங்குகள்
வனவாசம் துறந்தன
வெருளி மனிதர்கள்
உயிர்தார்கள்
வெறுமைக்குள்
பொறுமை
இழந்தது பண்பாடு...??
கட்டுப்பாடுகள்
கடிவாளமுடைத்தன
அரவாணித்தன
ஆண்
உறவுகள் மலர்ந்தன ...!!!
மன்மதச் சந்தையில்
மாதவிகள்
மலிந்து போயினர்
கோவலர்கள்
சிவப்பு ஒளியின்
காவலராக...!!
பூமித்தாய்
பொருமினாள் ...
குப்பைகளின்
கூத்தாட்டத்தில்
இச்சைகள் இறைவசனம்
பேசின ...!!!
துருவடைந்து போன
இரும்பு மனங்கள்
உப்புச்
சத்தியாக்கிரகம்
நடத்தின...!!
பாவநியதிகளின்
பரம்பொருள்
மனிதம்....
இனி
விந்துக்களின்
கலவுடலில்
கலாசார சீரழிவு
நிறமூர்த்தம்
மீண்டும்
கர்த்தர் வருகிறார்
ஈன
ஜீவிகளின்
அர்த்தமாக...!!!
No comments:
Post a Comment