பாய்ந்தோடும் ஆற்றிடை
மீன் தேடி
மூழ்கி முக்குளித்த
நீர்க்குருவி
சிறகை வருடி உலர்த்தும்
நிலை தெரிகிறது
உன்
பால் வதன
நினைவாற்றில்
அமிழ்ந்தெழுந்த -என்
இறக்கை
இதயம் நீவப்படுகிறது
நீ
மின்னல் கருவில்
பிறந்து சிரிக்கிறாய்
உன்
பின்னல் உலகம்
எனதாகிறது ...!!!
நான்
ரோஜா முட்களை
சேமிக்கின்றேன் -நீ
என்
குருதி வாசனை
குடிக்கின்றாய்
சாஸ்திரக்காரி நீ
வன்முறை
படிக்கின்றாய்
ஓர் இரவும்
ஓர் பகலுமாய்
கடக்கிறது என் வாழ்க்கை
நீ
அந்தி சாய்கின்றாய்...!!!
நுனி தொடங்கி
அடிவரை
என்
உயிர் மேய்கின்றாய்..!!!
வாள்முனை தீட்டி
செருக்களம் சேரும்
சாகதனாய்
பேனாமுனை
தீட்டி
உன் செயல் வளம்
நாளும்
கவிதை செய்கிறேன்
கல்லறையில்
காவல் நிற்கிறாய் ...!!
வீர மரணம்
வினாவாகிறது
காதல் சூட்சுமம்
மீன் தேடி
மூழ்கி முக்குளித்த
நீர்க்குருவி
சிறகை வருடி உலர்த்தும்
நிலை தெரிகிறது
உன்
பால் வதன
நினைவாற்றில்
அமிழ்ந்தெழுந்த -என்
இறக்கை
இதயம் நீவப்படுகிறது
நீ
மின்னல் கருவில்
பிறந்து சிரிக்கிறாய்
உன்
பின்னல் உலகம்
எனதாகிறது ...!!!
நான்
ரோஜா முட்களை
சேமிக்கின்றேன் -நீ
என்
குருதி வாசனை
குடிக்கின்றாய்
சாஸ்திரக்காரி நீ
வன்முறை
படிக்கின்றாய்
ஓர் இரவும்
ஓர் பகலுமாய்
கடக்கிறது என் வாழ்க்கை
நீ
அந்தி சாய்கின்றாய்...!!!
நுனி தொடங்கி
அடிவரை
என்
உயிர் மேய்கின்றாய்..!!!
வாள்முனை தீட்டி
செருக்களம் சேரும்
சாகதனாய்
பேனாமுனை
தீட்டி
உன் செயல் வளம்
நாளும்
கவிதை செய்கிறேன்
கல்லறையில்
காவல் நிற்கிறாய் ...!!
வீர மரணம்
வினாவாகிறது
காதல் சூட்சுமம்
புரிகிறது...!!!

No comments:
Post a Comment